Homeசெய்திகள்சினிமாஜேசனின் முதல் படத்திற்கே லைகா நிறுவனம் கிடைக்க காரணம் யார் தெரியுமா!?

ஜேசனின் முதல் படத்திற்கே லைகா நிறுவனம் கிடைக்க காரணம் யார் தெரியுமா!?

-

- Advertisement -

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பொதுவாக இப்படியான நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவில் நடிகர்களாகவே களமிறங்குவர். ஆனால் இதற்கு மாறாக விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
ஜேசன் சஞ்சய் இயக்கனராக அறிமுகமாகும் முதல் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ஜேசன் இந்தப் படத்தில் இணைய அவரது சித்தப்பா தான் காரணமாம்.
விஜயின் சித்தி மகன் ஆன இயக்குனர் சஞ்சீவ் லைகா ப்ரொடக்சன் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான தமிழ்குமரனுடன் தொடர்பில் இருந்துள்ளார். சஞ்சீவ் ஏற்கனவே தாக்க தாக்க என்ற படத்தை இயக்கியுள்ளார். எனவே தனது அடுத்த படத்திற்காக கதை கூறுவதற்காக தமிழ்குமரன் உடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் ஜேசன் தனது சித்தப்பா சஞ்சீவிவிடம் தான் ஒரு கதை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.அந்தத் தகவலை சஞ்சீவ், லைகா நிறுவனத்தின் தமிழ்குமரன் இடம் தெரிவிக்க அவர் ஜேசனிடம் கதைகேட்டுள்ளார் . கதை அவருக்கு பிடித்து போகவே உடனே படத்தை தயாரிக்க சம்மதித்துள்ளனர். சந்திரமுகி 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்த லைகா நிறுவனர் சுபாஷ்கரன் உடனே ஜேசனை அழைத்து படத்திற்கான ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
ஜேசன் எந்த ஜானரில் படம் எடுக்கப் போகிறார் என்று தமிழ் சினிமாவே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

MUST READ