Homeசெய்திகள்சினிமாநாளை ஓடிடி தளத்தில் வெளியாகும் இறைவன்

நாளை ஓடிடி தளத்தில் வெளியாகும் இறைவன்

-

ஜெயம்ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இறைவன் திரைப்படம், ஓடிடி தளத்தில் வௌியாக உள்ளது.

என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமது தற்போது ஜெயம் ரவி நடிப்பில் ‘இறைவன்’ படத்தை இயக்கியுள்ளார். நயன்தாரா இந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். சார்லி, நரேன் பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நிலையில் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரமான சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் படத்தின் மூலம் பிரபலமான ராகுல் போஸ் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் கடந்த மாதம் 28-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் சைக்கோ கில்லராக அமைந்த ராகுல் போஸ் இளம் பெண்களை கடத்திச் சென்று மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்கிறார். அதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களை சித்தரவதை செய்து கொலை செய்வதை வீடியோ எடுத்து அவர்கள் குடும்பத்தினருக்கு அனுப்பி அவர்களை தற்கொலை செய்ய வைப்பது என காட்சிப்படுத்தியிருப்பார்கள். இதனால், பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் எழுந்தது.

இந்நிலையில், நாளை இறைவன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நெட்பிளிக்ஸ் தளத்தில் இறைவன் திரைப்படம் வெளியாக உள்ளது.

MUST READ