spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலைக்கா நிறுவனத்துடன் இணைந்த '2018' படத்தின் இயக்குனர்!

லைக்கா நிறுவனத்துடன் இணைந்த ‘2018’ படத்தின் இயக்குனர்!

-

- Advertisement -

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5ஆம் தேதி ‘2018’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், லால், நரேன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளம், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. மலையாளத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் வெளியான 10 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்ட இப்படம் தமிழ்நாட்டிலும் வசூலை வாரிக் குவித்தது.

மேலும் மலையாள சினிமாவில் அதிவேகமாக 150 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படமாக பேசப்பட்டது.

we-r-hiring

இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், தனது அடுத்த படத்தை லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூட் ஆண்டனியின் புதிய படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
ஆனால், ஏற்கனவே நிவின் பாலி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் ஜூட் ஆண்டனி ஜோசப் படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியானது.

இது சம்பந்தமாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஜூட் ஆண்டனி ஜோசப் நிவின் பாலி உடன் இணைந்து ஓம் சாந்தி ஓசனா படத்தை இயக்கியிருந்தார்.
இப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

விஜய் சேதுபதியும் மலையாளத்தில் 19 (1) (a) என்ற படத்தின் மூலம் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டார்.

எனவே ஜூட் ஆண்டனி ஜோசப், நிவின் பாலி, விஜய் சேதுபதி கூட்டணியில் அடுத்த படம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ