Homeசெய்திகள்சினிமாகீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே கூட்டணியில் அக்கா... படப்பிடிப்பு நிறைவு...

கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே கூட்டணியில் அக்கா… படப்பிடிப்பு நிறைவு…

-

- Advertisement -
கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே கூட்டணியில் உருவாகி வரும் அக்கா இணைய தொடரின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

தென்னிந்தியாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். 2022-ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக் காயிதம், சர்காரு வாரி பட்டா, வாஷி உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இதில் சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தியின் நடிப்பு பாராட்டப்பட்டது. தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் சைரன். இதில் ஜெயம்ரவியுடன் இணைந்து காவலர் கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்திருந்தார்.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ரகு தாத்தா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் அட்லீ தயாரிக்கிறார். வருண் தவான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், தமிழில் கன்னிவெடி படத்தில் நடிக்கிறார். மற்றொரு திரைப்படம் ரிவால்வர் ரீட்டா.
இதுதவிர, பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவுடன் இணைந்து புதிய இணைய தொடர் ஒன்றிலும் அவர் நடித்து வருகிறார். இந்த தொடரின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவிவித்துள்ளது. அக்கா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த தொடரை, அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார். யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த தொடரை தயாரிக்கிறது. திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த தொடரின் பின்னணி வேலைகள் தொடங்கி இருக்கின்றன.

MUST READ