நடிகை ராஷ்மிகா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி இவர், ஏற்கனவே சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் சிக்கந்தர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனின் 24 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர் தனுஷின் 51வது படமான குபேரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது 2025 ஜூலை மாதம் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் சேகர் கம்முலா, நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “நடிகை ராஷ்மிகாவின் உழைப்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் குபேரா படத்தில் நடிக்க வரும்போது ஒரு பக்கம் மும்பையில் அனிமல் படத்தின் டப்பிங் பணிகளும் நடந்து கொண்டிருக்கும். மற்றொரு பக்கம் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இவ்வாறு மும்பை, ஐதராபாத் என பறந்து பறந்து இரவு பகல் பாராமல் உழைத்தார் ராஷ்மிகா. ஆனாலும் படப்பிடிப்பில் அவரிடம் எந்தவித சோர்வும் இருக்காது. குபேர படத்தில் தனுஷ்- ராஷ்மிகா காம்பினேஷன் பிரஷ்ஷான ஜோடியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -