spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகேரளாவில் சாதனை நிகழ்த்திய லியோ திரைப்படம்

கேரளாவில் சாதனை நிகழ்த்திய லியோ திரைப்படம்

-

- Advertisement -
விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.
இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. நடப்பு வருடத்தில் முதல் நாளிலேயே 140 கோடி வசூலித்த முதல் திரைப்படம் லியோ என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இது மட்டுமன்றி இங்கிலாந்திலும் முதல் நாளில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது லியோ திரைப்படம். மேலும், கடந்த 7 நாட்களில் 500 கோடிக்கு மேல் லியோ திரைப்படம் வசூலித்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரசிகர்கள் மட்டுமன்றி லியோ படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். இதைத் தொடர்ந்து படத்தின் வெற்றி விழாவும் சென்னையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது

இந்நிலையில், கேரளாவில் லியோ திரைப்படம் புதிய சாதனை நிகழ்ச்சி உள்ளது. அதன்படி, கேரள மாநிலத்தில் அதிக அளவில் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமை லியோவுக்கு கிடைத்துள்ளது. படம் வெளியான நாளிலிருந்து 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

MUST READ