Homeசெய்திகள்சினிமாமறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி தொடர்பான வழக்கு... ஐகோர்ட் அதிரடி உத்தரவு...

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி தொடர்பான வழக்கு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…

-

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கில், விழா ஏற்பாட்டாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். படங்கள் மட்டுமன்றி அவ்வப்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பின் கீழ் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். அளவுக்கு அதிகமாக டிக்கெட்கள் விற்கப்பட்டதால் நிற்கக்கூட இடமில்லாமல் ரசிகர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பலரால் பங்கேற்கமுடியாமல் போனது.

நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதது பற்றி வலைதளங்களில் பலர் ஆதங்கம் தெரிவித்த நிலையில், ஏற்பட்டாளரான ஏசிடிசி நிறுவனம் மன்னிப்பு கேட்டு வீடியோ பகிர்ந்தது. திட்டமிட்டதைவிட அதிக ரசிகர்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும், ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும் ஏசிடிசி நிறுவனம் டிவிட்டரில் விளக்கம் அளி்த்தது. இருப்பினும் இந்த பிரச்சனைக்கு காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விளாசினர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் அசௌகரியங்கள் காரணமாக ஏடிசி நிறுவனத்தின் நிறுவனர் ஹேமந்த் ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுய லாபத்திற்காக மக்களை ஏமாற்றுதல் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்யுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஹேமந்த் ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

MUST READ