மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மோகன்லால் தற்போது வ்ருஷபா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் நேரு என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இதனை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

மோகன்லால், ஜுத்து ஜோசப் இருவரின் கூட்டணி ஏற்கனவே த்ரிஷயம் 1, த்ரிஷயம் 2, 12th Man உள்ளிட்ட படங்களில் இணைந்திருந்தது.
த்ரிஷயம் 1, த்ரிஷயம் 2, திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் நான்காவது முறையாக நேரு- SEEKING JUSTICE படத்தில் இணைந்துள்ளது.
இதில் மோகன்லால் உடன் இணைந்து பிரியாமணி நடிக்கிறார். ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க விஷ்ணு ஷியாம் இசையமைக்கிறார். சதீஷ் குருப் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை உடன் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது படக்குழுவினர் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.