நடிகர் மம்மூட்டியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்னுடைய ‘ஏலே’ திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு!

சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிய சிறிது நேரத்திலேயே முகநூல் பதிவை நீக்கினார் ‘சில்லு கருப்பட்டி’ இயக்குனர் ஹலிதா ஷமீம்!

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில், மம்மூட்டி, ரம்யா, பூ ராமு, ஜி எம் சுந்தர், நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19-ம் தேதி வெளியானது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ இது தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளியானது.

ரசிகர்கள் மத்தியிலும், பத்திரிக்கையாளர் மத்தியிலும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம், அப்படியே தன்னுடைய ‘ஏலே’ படத்தின் கதை என இயக்குனர் சில்லு கருப்பட்டி இயக்குனர் ஹலிதா ஷமீம் முகநூலில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு குறித்து பரபரப்பாக பேசப்பட்ட சிறிது நேரத்திலேயே இயக்குனர் ஹலிதா சமீம் அந்த பதிவை நீக்கினார்.

சமுத்திரகனி, மணிகண்டன் நடிப்பில், ஹலிதா ஷமீம் இயக்கத்தில் 2021-ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதி திரையரங்கில் இல்லாமல் நேரடியாக தனியார் தொலைக்காட்சியில் வெளியானது, கிராமத்து பின்னணியில் நகைச்சுவை கலந்த உணர்வுபூர்வமான படமாக இது அமைந்திருந்தது. இந்நிலையில் ‘ஏலே’ திரைப்படத்தில் வரும் அதே கதாபாத்திரங்களும், காட்சி அமைப்புகளும், கிராமங்களும் அனைத்தும் ஒத்துப்போவதாக ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார்.
முகநூல் பக்கத்தில் ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளதாவது;
“Stealing all the aesthetics from a film isn’t acceptable”.
‘ஏலே’ படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து முதன் முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.

அதே கிராமத்தில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்‘ படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே.
இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்த படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயற்சியை தருகிறது. ஐஸ்காரர் இங்கே பால்க்காரர். செம்புலி இங்கே செவலை. Mortuary van பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது.
நான் அறிமுகப்படுத்திய ‘சித்திரை சேனன்‘ நடிகர்-பாடகர், ஏலே- வில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக் கொண்டிருக்கிறார்.
படமாக்கப்பட்ட வீடுகள், பல முறை பார்த்து பின் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள்- இவை யாவும் படத்தில் பார்த்தேன்.
நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன!
எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்க பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதை பதிவிடுகிறேன்.

“You can dismiss my film Aelay, but I’ll not be quite if the ideas and aesthetics from it is mercilessly ripped off.
Halisha, director sillu karupatti and Aelay”
இவ்வாறு முகநூலில் படத்தை ஒப்பிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்த ஹலிதா சமீம் சிறிது நேரத்திலேயே தனது பதிவை நீக்கி உள்ளார். மலையாளத்தில் ‘அங்காமாலி டைரிஸ்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘இமாயு’ உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு திரைத்துறையில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


