Homeசெய்திகள்சினிமாவிஜயின் அரசியல் வருகை குறித்து பேசிய நவரச நாயகன் கார்த்திக்!

விஜயின் அரசியல் வருகை குறித்து பேசிய நவரச நாயகன் கார்த்திக்!

-

நடிகர் விஜய் லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜயின் அரசியல் வருகை குறித்து பேசிய நவரச நாயகன் கார்த்திக்!இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படமானது 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். ஆகவே தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் என்றும் அதன் பின்னர் தான் முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விஜயின் அரசியல் வருகைக்கு பொதுமக்களும் திரை பிரபலங்களும் தங்களின் ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றனர். இந்நிலையில் ரசிகர்களால் நவரச நாயகன் என்று கொண்டாடப்படும் பிரபல நடிகர் கார்த்திக், விஜயின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். விஜயின் அரசியல் வருகை குறித்து பேசிய நவரச நாயகன் கார்த்திக்!அவர் பேசியதாவது, “விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவர் அரசியலுக்கு வருவது எனக்கு சந்தோஷம். பொதுமக்களும் விஜயின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜய் நடிப்பதை விட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாக தெரிவித்துள்ளார். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் போது இந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். ஏனென்றால் படங்களின் மூலம் அவர் தன்னுடைய கோரிக்கையையும் யோசனைகளையும் மக்களுக்கு சொல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ