போலீசிடம் சிக்கிய நடிகை நிவேதா பெத்துராஜ்… அதிகாரிகளிடம் வாக்குவாதம்…
- Advertisement -
ஐதராபாத்தில் காரை மடக்கிப்பிடித்த போலீசாரிடம், நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷூக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக எம்மனசு தங்கம், ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அலவைக்குந்தபுரமுலோ திரைப்படத்தில் நிவேதா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அண்மையில், யூ டியூபர் ஒருவர் நிவேதா பெத்துராஜ் தொடர்பாக அவதூறு பரப்பினார். அதில், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நிவேதா பெத்துராஜூக்கு துபாயில் சுமார் 50 கோடி ரூபாய் செலவில் புதிய வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், அதுமட்டுமன்றி அவருக்கு காரையும் வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, அவர் மீது அரசியல் ரீதியிலான கடும் விமர்சனங்களை தொடர்ந்து வைத்து கொண்டே இருந்தனர்.
இந்நிலையில், ஐதராபாத்தில் காரில் சென்று கொண்டிருந்த நடிகை நிவேதா பெத்துராஜை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரின் டிக்கியை திறக்க கூறியிருக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை நிவேதா, போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருப்பினும், இது பட புரமோசனுக்காக இருக்கலாமோ என்றும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.