- Advertisement -
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபலமான ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியாகாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. லலித்குமார் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஸ்கின், அர்ஜூன், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. படத்திற்காக 5 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 7 மணி காட்சிக்கு மட்டும் அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.
இது தவிர, வெளியீட்டுக்கு முன்பே சர்வதேச அளவில் லியோ திரைப்படம் சாதனை படைத்து வந்தாலும், சென்னையில் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்காமல் உள்ளது. படத்தின் தயாரிப்பாளருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே நிலையான முடிவு எட்டப்படாததால் இந்த இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
