spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபோதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரசாத் பரபரப்பு வாக்குமூலம்…

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரசாத் பரபரப்பு வாக்குமூலம்…

-

- Advertisement -

போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் கைதான நிலையில், பிரதீப் மற்றும் தனது நண்பர்களிடமும் பிரசாத் போதைப்பொருளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.
போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரசாத்  பரபரப்பு வாக்குமூலம்…
போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நேற்று நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டாா். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்திடமிருந்து ஒரு கிராம் கொக்கைனை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், ஏ1 பிரதீப்குமார், ஏ2 ஜான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஏ3 யாக நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சேர்க்கப்பட உள்ளார் எனவும், போதை பொருள் தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் நடிகர் ஸ்ரீகாந்த் உட்பட மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்திடமிருந்து ஒரு கிராம் கொக்கைன் போதை பொருள் பறிமுதல்

we-r-hiring

இந்நிலையில், ஏற்கெனவே நுங்கம்பாக்கத்தில் பிரதீப் குமாரிடமிருந்து 1 கிராம் கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் கானா நாட்டை சேர்ந்த ஜானை பெங்களூருவில் வைத்து காவல் துறையினா் கைது செய்தனா். பிரதீப் குமார் கொடுத்த தகவலின் பேரில் தான் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்து நுங்கம்பாக்கம் போலீசார் சிறையில் அடைத்தனர். கொக்கைன் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து 1 கிராம் கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரும் எழுப்பி வரும் கேள்வி

போதை பொருள் பயன்படுத்தியதற்காக ஏன் கைது செய்ய வேண்டும் என சிலர் கேள்விகள் எழுப்பிய வரும் நிலையில், இந்த போதை பொருள் வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரையும் ஆதாரத்துடன் கைது செய்து வேரோடு அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், ஆதாரங்கள் கிடைக்க கிடைக்க அனைவரும் அதன் அடிப்படையில்  போதை பொருள் வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தகவல் அளித்துள்ளனா்.

மேலும், பிரதீப் தனது நண்பர்களிடமும் பிரசாத் போதைப்பொருளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் அடிப்படையில்  போதைப்பொருள் விற்பனை கும்பலை சேர்ந்த நான்கு நபர்களையும் போலீசாா்  தேடி வருகின்றனர். அவர்கள் மூலமாக மேலும் சிலர் சிக்கக்கூடும் என தகவல் அளித்துள்ளனா். பிரசாத் என்னிடமிருந்து கொகைன் வாங்குவதைப்போல என்னுடைய நண்பர்களான லிங்கேஸ்வரன், யோகராஜ், யூசுப், கெவின் மற்றும் ஆட்கள் மூலமாகவும் கோகைனை வாங்கி பயன்படுத்தவும் செய்வார். அதை விற்கவும் செய்வார் என பிரதீப் போலீசார் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதி மன்ற காவல்!

MUST READ