போதைப்பொருள் வழக்கில் கைதாகிய நடிகர் ஸ்ரீகாந்த் காவல் துறையின் விசாரணையில் முன்னாள் அதிமுக பிரமுகர் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளாா்.
கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மூலம் தான் நடிகர் ஸ்ரீகாந்திற்கு கொகைன் போதைப்பொருள் கிடைத்துள்ளதை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

பிரசாத் மூலமாக 8 முறை ஸ்ரீகாந்திற்கு கொகைன் சப்ளையாகி உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இருவருக்கும் இடையே பண பரிவர்த்தனைகளும் நடந்துள்ளது. அதனால் 2 பேரையும் ஒன்றாக காவலில் எடுத்து விசாரித்தால் தான் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில் ஒன்றாக போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீகாந்தையும், பிரசாத்தையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை எழும்பூர் நீதிமன்றத்தில் நுங்கம்பாக்கம் போலீசார் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை அதிகாலையில் தான் துபாய் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். அன்று இரவு நுங்கம்பாக்கம் வீட்டில் கொகைன் பார்ட்டியை நடத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
சனிக்கிழமை கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்படுவதற்கு முன்பே அவரிடமிருந்து கொக்கைன் பாக்கெட்டாக வாங்கியதாகவும், அதனை சனிக்கிழமை நடந்த பார்ட்டியில் ஸ்ரீகாந்த் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரசாத் சிறைக்கு செல்வதற்கு முன்னதாக 250 கிராம் கொக்கைன் கொடுத்தாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனக்கு பிரசாத் மட்டுமே தெரியும். அவரிடம் தான் கொகைன் போதைப்பொருள் வாங்கியதாகவும் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். பிரசாத் தன்னை வைத்து படம் தயாரித்துள்ளார். அப்போது எனக்கு ரூ. 10 லட்சம் பிரசாத் தரவேண்டும். அதனை கேட்கும் போது கொகைன் போதைப்பொருள் கொடுத்து பிரசாத் தான் பழக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்முறையாக பயன்படுத்திய பிறகு மீண்டும் மீண்டும் அவர் தான் இந்த பழக்கத்தை தனக்கு ஏற்படுத்தியதாகவும், பணம் கேட்கும் போதெல்லாம் கொகைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியது பிரசாத் தான் என்றும் அவரரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதீப் குமாரின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரசாத் பரபரப்பு வாக்குமூலம்…