திருவேற்காட்டில் நடிகர்கள் பயன்படுத்தும் கேரவன் ஓட்டுநர் கேரவன் பார்க்கிங்கில் வாகனத்தின் அருகே சக ஓட்டுநர்களுடன் அமர்ந்து இருந்த போது டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தாா்.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி(30) என்பவர் நடிகை நடிகர்கள் பயன்படுத்தும் கேரவனை ஓட்டி வருகிறார். விஜய் சேதுபதியின் வெப் சீரியஸ் ஒன்றிற்கு தற்போது கேரவன் ஓட்டி வரும் சேதுபதி இன்று அதிகாலை கேரவனை எடுத்து செல்வதற்காக கேரவன் பார்க்கிங்கில் வாகனத்தை சுத்தம் செய்துவிட்டு வாகனத்தின் அருகே சக ஓட்டுநர்களுடன் அமர்ந்து இருந்துள்ளார்.
அப்போது திடீரென பார்கிங்க் யார்டிற்குள் அதி வேகமாக புகுந்த லாரி சேதுபதி மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதில் அதிஷ்டவசமாக பார்க்கிங்கில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் உயிர் தப்பினர். விபத்தை அடுத்து சக ஓட்டுநர்கள் சேதுபதியின் உடலை வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வானகரம் காவல்துறையினா் விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து காவல்துறையினர் உடலை கொண்டு செல்ல சக ஓட்டுநா்கள் அனுமதித்தனா். இந்த விபத்து காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…அதிரடியாக குறைந்த தங்கம் விலை