- Advertisement -
ஐதராபாத்தில் உள்ள அரசு கல்லூரியில் புஷ்பா இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இத்திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி இந்தியிலும் புஷ்பா திரைப்படம் சக்கைப்போடு போட்டது. படத்தில் சுனில், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அண்மையில் பெற்றார். படத்தின் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.
