spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சூப்பர் ஸ்டாரின் பெயரை கெடுத்து விடக்கூடாது என்ற பயத்திலேயே நடித்தேன்'..... ராகவா லாரன்ஸ்!

‘சூப்பர் ஸ்டாரின் பெயரை கெடுத்து விடக்கூடாது என்ற பயத்திலேயே நடித்தேன்’….. ராகவா லாரன்ஸ்!

-

- Advertisement -

கடந்த 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இன்றுவரையிலும் பலரின் ஃபேவரிட் படமாக இப்படம் இருக்கிறது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பி வாசு சந்திரமுகி இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார்.

இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனார் ரனாவத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய முன் தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

we-r-hiring

அந்த விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், “சந்திரமுகி 2 படத்தின் கதையை இயக்குனர் வாசு என்னிடம் கூறிய போதே எனக்கு பிரம்மாண்டமாக தெரிந்தது. சந்திரமுகி முதல் பாகத்தில் தலைவர் நடித்திருந்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது தலைவரின் பெயரை கெடுத்து விடக் கூடாது என்று பயந்து கொண்டே நடித்தேன்” என்று கூறியுள்ளார்.

MUST READ