நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர். இவர் தற்போது பென்ஸ், ஹண்டர் போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார். அதேசமயம் காஞ்சனா 4 திரைப்படத்தையும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ். இதற்கிடையில் இவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். அன்பு இந்த படத்தை எழுதி இயக்குகிறார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் இணைந்துள்ளதையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ராகவா லாரன்ஸ், சண்முக பாண்டியன் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறது.
மேலும் சண்முக பாண்டியன் ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸும் சண்முக பாண்டியன் உடன் இணைந்து நடிக்கப் போகிறாராம். இந்த படமானது இரண்டு ஹீரோக்களின் கதையாக உருவாக இருக்கிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -