- Advertisement -
மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் திரைப்படங்களில் அவருடன் இணைந்து நடிக்க தயார் என பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உயிரிழந்தார். நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கிசிச்சை பலனின்றி அவர் மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது உடல் தேமுதிக அலுவலத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது நினைவிடத்தில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அண்மையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து பேசிய ராகவா லாரன்ஸ், நேற்று முன் தினம் விஜயகாந்த்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். தொடர்ந்து அவரது வீட்டுக்கும் சென்று குடும்பத்தினரை சந்தித்தேன். அப்போது பேசிக்கொண்டிருந்தபோது, விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை காட்டி, தம்பி ஹீரோவாக நடிக்கிறான். நீங்கள் தான் அவனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விஜயகாந்தின் சகோதரி தெரிவித்தார். அந்த வார்த்தை என் மனதில் பதிந்தது. விஜயகாந்த் பல நடிகர்களுக்கு உதவி செய்துள்ளார். வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
I’m happy to share with you all that I’m ready to do a cameo role in captain sir’s Son Shanmuga Pandian’s movie as my respect and love for Vijayakanth sir 🙏🏼 pic.twitter.com/zIlNBqnVs2
— Raghava Lawrence (@offl_Lawrence) January 10, 2024