புஷ்பா 2 படப்பிடிப்பில் இருந்து வெளியேறினாரா ராஷ்மிகா? அதிர்ச்சி தகவல்…
- Advertisement -
புஷ்பா இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பாதியிலேயே வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராகவும், வாரிசு நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். அவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தான நடித்திருப்பார். சுனில், ஃபகத் பாசில், பிரசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்தித்தில் நடித்திருந்தனர். தேவி 2 பிரசாத் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படத்தை சுகுமார் இயக்கினார். டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. வசூலிலும் பட்டையை கிளப்பியது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியான ‘புஷ்பா தி ரூல்‘ படத்திலும் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த பகத் பாஸில் வில்லனாக நடிக்கிறார்.மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். கடந்த மே மாதம் ஃபகத் ஃபாசில் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கிடையில் புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அனிமல் பட வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக, புஷ்பா 2 படப்பிடிப்புத் தளத்திலிருந்து ராஷ்மிகா மந்தனா பாதிலிலேயே வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆனால், ராஷ்மிகா தரப்பில் இந்த தகவலை மறுத்துள்ளனர். இயக்குநரின் அனுமதிக்கு பிறகே அவர் அனிமல் பட விழாவில் பங்கேற்றதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.