சலார் இரண்டாம் பாகம் வெளியாகும்போது உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரிய வரும். கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறேன், விமர்சனங்களுக்காக அடுத்த பாகத்தில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என்றும் சலார் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தி்ல பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் சலார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்ட கடந்த 22-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், வசூல் ரீதியாக சலார் படம் வெற்றி கண்டு வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் பேட்டி அளித்துள்ளார். அதில், 6 மணி நேர திரைப்படத்தில் தற்போது 3 மணி நேர கதை தான் வெளியாகி உருக்கிறது. கதைக்கு தேவையில்லாத எந்த ஒரு சிறு கதாபாத்திரத்தையும் நான் சேர்க்க மாட்டேன். படத்தை பார்த்த பார்வையாளர்கள் கதையை பின்தொடர்வது கடினமாக உள்ளது என்கின்றனர். சலார் இரண்டாம் பாகம் வெளியாகும் போது உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரிய வரும். கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறேன், விமர்சனங்களுக்காக அடுத்த பாகத்தில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், முழு கதையையும் பார்த்த பிறகு தான் கதாபாத்திரங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இந்த விமர்சனங்கள் 2-ம் பாகத்தில் மாறும். ஒரு இயக்குநராக எழுதப்பட்ட கதையை எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி விவரிப்பது தான் என் வேலை என்றார்.