பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் தமிழில் நூறு கோடிக்கும் மேலாக வசூலிக் குவித்தது. இதேபோல கேஜிஎஃப் இரண்டாம் பாகம் திரைப்படமும் உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து அதுமட்டுமன்றி யாஷ் மற்றும இயக்குநர் பிரசாந்த் நீலை, இந்தியாவின் மாபெரும் நட்சத்திரங்களாக நிலை நிலைத்தியது.
இதைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கி வரும் அடுத்த பிரம்மாண்ட படைப்பு சலார். இப்படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கிறார். பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே ஜி எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சலார் PART 1 CEASE FIRE என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 10 கோடி பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்தது. இப்படி தமிழில் நன்கு பிரபலமான நடிகர், நடிகைகள் நடிக்கும் சலார் படத்தை தமிழில் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் வெளியிடுகிறார்கள்.
இந்தியிலும், தெலுங்கிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அளவு தமிழில் எந்த எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை என திரையுலகினர் தெரிவிக்கின்றனர். பாகுபலி 2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து இங்கு வெளியான ராதே ஷ்யாம், சாஹோ, ஆதிபுருஷ் ஆகிய படங்கள் வெற்றி பெறாமல், தோல்வி அடைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதை சலார் திரைப்படம் ஈடுகட்டுமா என பொறுத்திருந்துதான் காண வேண்டும்.