Homeசெய்திகள்சினிமாசல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம்... மேலும் ஒருவர் கைது...

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம்… மேலும் ஒருவர் கைது…

-

- Advertisement -
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான்கான். அவர் இந்தியில் பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது பிரபல தமிழ் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஸ்கந்தா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், மும்பை பாந்ரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, சுவரில் தோட்டா பாய்ந்து துளை விழுந்தது. வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சியும் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், நடிகர்வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விக்கி குப்தா அனுஜ், சாகர் பால் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு துப்பாக்கியை வழங்கியதாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தற்போது இதுவரை சுமார் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

MUST READ