நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதன்படி இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் நடிகர் சத்யராஜ், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இட்லி கடை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சத்யராஜ். இந்த நிலையில் சத்யராஜின் மகள் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி கடந்த நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாகவும் டியூப் மூலம் தான் அவருக்கு உணவுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனால் மனதளவில் உடைந்து விட்டோம் என்றும் நம்பிக்கையுடன் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்கிறோம் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் “தனி ஆளாக அப்பா தான் குடும்பத்தை சமாளித்து வருகிறார், தாய்க்கு தாயாக இருக்கிறார். எனவே நானும் அப்பாவுக்கு தாயாக மாறிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -