spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடிவிட்டரில் புதிரான கருத்துக்களை பதிவிட்டு செல்வராகவன்

டிவிட்டரில் புதிரான கருத்துக்களை பதிவிட்டு செல்வராகவன்

-

- Advertisement -

உங்கள் கதை முடிந்தால் உலகம் சந்தோஷப்படும்! அதிலிருந்து மீண்டெழுவதுதான் உங்கள் வாழ்வின் சாதனை – இயக்குனர் செல்வராகவன்

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் டிவிட்டரில் அடிக்கடி புதிரான பல்வேறு தத்துவக் கருத்துக்களை பதிவிட்டு சினிமா ரசிகர்களிடைய புத்துணர்வை ஏற்படுத்தி வருவது வழக்கமாகும்.

டிவிட்டரில் புதிரான கருத்துக்களை பதிவிட்டு செல்வராகவன்

we-r-hiring

மேலும் அதன் விளைவாக பலதரப்பு நடிகர் மற்றும் இயக்குனர்களின் ரசிகர்கள் அத்தத்துவ கருத்தின்பால் ஈர்க்கப்பட்டு எண்ணிலடங்கா சினிமா ரசிகர்கள் டிவிட்டரில் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அதனைத்தொடர்ந்து, 7 ஜி ரெயின்போ காலனி-2 எனும் திரைப் படத்தை இயக்குவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளார்.

டிவிட்டரில் புதிரான கருத்துக்களை பதிவிட்டு செல்வராகவன்

இந்நிலையில் அவர் அச்செய்தியினை அவரது சினிமா ரசிகர்களுக்காக தெரிவிக்கும் வகையில், அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில் ‘இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோசம் ஏற்படும் எனவும், கூத்தாடும் உங்களை புதைத்து விட்டுதான் மறு வேலை பார்க்கும் எனவும், மேலும் அதிலிருந்து நீங்கள் மீண்டு வருவதுதான் உங்கள் வாழ்வின் சாதனை என்ற பொருள்படும் படி செல்வராகவன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரை பின் தொடரும் பலோவர்கள் அவரை வாழ்த்தியும் பாராட்டியும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ