பிக்பாஸ் புகழ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
திரைப்படங்களை தாண்டி மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பத் தொடங்கி இருக்கின்றனர். அதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்நிகழ்ச்சியை தினந்தோறும் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஷெரினா. இவர், பெங்களூரைச் சேர்ந்த மாடல் அழகியும் ஆவார்.
இவர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான விநோதய சித்தம் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் அவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், ஷெரீனாவின் மேலாளர் கவுரி அண்ணாசாலை காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார். அப்புகாரில் ஷெரீனாவிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கொலை மிரட்டல் விடுத்து, பாலியல் தொல்லையில் ஈடுபட முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரை அடுத்து அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை ஷெரீனாவின் கார் ஓட்டுநர் கார்த்திக் மற்றும் அவரது நண்பரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, தன்னை வேலைநிறுத்தம் செய்த ஆத்திரத்தில் தான் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.