நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான இராவண கோட்டம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் ராமநாதபுரம் சுற்றுவட்டார மக்களின் வாழ்க்கையை பற்றி பேசக்கூடிய படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் விசிக கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இராவணக் கோட்டம் படத்தை சாந்தனு, விக்ரம் சுகுமாரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் சேர்ந்து பார்த்துள்ளார்.
“இத்திரைப்படத்தை இயக்குனர் விக்ரம் சுகுமாரன், இரு சமூகத்தினர் இடையே உள்ள பிரச்சனைகளை கூறுவதோடு மட்டுமல்லாமல் பல கோணத்தில் உண்மை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு சிறப்பாக இயக்கியுள்ளார்” என இப்படத்தை பற்றி பாராட்டி பேசி உள்ளார்.
இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிவரும் சமூக நீதி காவலர் ஐயா தொல் திருமா அவர்களின் வாழ்க்கை எங்களுக்கு கிடைத்த தேசிய விருதாகவே கருதுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.