Homeசெய்திகள்சினிமாமீண்டும் படப்பிடிப்பில் இணைந்த சிவராஜ்குமார்.... ஆரத்தி எடுத்து வரவேற்பு!

மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த சிவராஜ்குமார்…. ஆரத்தி எடுத்து வரவேற்பு!

-

- Advertisement -

நடிகர் சிவராஜ்குமார் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த சிவராஜ்குமார்.... ஆரத்தி எடுத்து வரவேற்பு!

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிவராஜ்குமார். இவர் தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இவர் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஜெயிலர் முதல் பாகத்தில் இவரது காட்சிகள் சில நிமிடங்களே இடம் பெற்று இருந்தாலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. எனவே ஜெயிலர் 2 படத்திலும் இவர் நடிக்க உள்ள தகவல் எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கியுள்ளது.

இதற்கிடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சிவராஜ்குமார் மீண்டும் படப்பிடிப்பில் இணைய போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி ஜெயிலர் 2 படத்திற்காக மே மாதம் கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிவராஜ்குமார் தனது 131 வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் அவர் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சிவராஜ்குமாரின் 131 வது படத்தை கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். இந்த படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைக்க ஏ.ஜே. ஷெட்டி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ