நடிகர் சிம்பு, பத்து தல படத்திற்குப் பிறகு தனது 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
மேலும் இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாகவும் இந்த படம் பான் இந்திய அளவில் உருவாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் செக்கச் சிவந்த வானம் படத்திற்குப் பிறகு, சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அதேசமயம் கமல்ஹாசனின் 234 வது படத்தையும் மணிரத்தினம் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது கமல்ஹாசனின் ‘KH 234’ படமும் சிம்புவின் ‘STR 50’ படமும் ஒரே படம்தான் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவின் கூட்டணியில் மணிரத்தினம் இயக்கம் இந்த படத்தில் சிம்பு கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் தான் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்குள் தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக சிம்பு நடிக்க இருக்கும் இந்த தகவல் ரசிகர்களுக்கு பேரின்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது எனலாம்.