பாடகி ஆஷா போஸ்லே இறந்ததாக கூறிய அந்த செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை. அது முற்றிலும் வதந்தி என்று தற்போது அவர்களின் குடும்பத்தினா்கள் கூறியுள்ளனா்.தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடகி ஆஷா போஸ்லே பாடியுள்ளாா். சமீபத்தில் பாடகி ஆஷா போஸ்லே ஜூலை 1 ஆம் தேதி அவரது மறைந்த கணவர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுள்ளாா். அப்போது அவா் உடல்நிலைகுறைவினால் உயிரிழந்துவிட்டதாக பேஸ்புக் போஸ்ட்டில் ஷபானா செக் என்பவர் பதிவிட்டாா். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், அவருடைய மகன் ஆனந்த் போஸ்லே மற்றும் அவரது குடும்பத்தினா் அது உண்மை அல்ல என்றும், ஆஷா போஸ்லே நலமுடன் உள்ளாா் என்றும் அதிகாரப் பூா்வமாக தெரிவித்தனா்.
மேலும், அவருடைய இறப்பு தொடர்பாக பரவும் செய்திகள் வதந்தி என்ற தகவலையும் அவருடைய குடும்பத்தினர் தற்போது விளக்கமாக தெரிவித்து இருக்கிறார்கள்.
பாராம்பரியத்தை பரைசாற்றும் உணவுத் திருவிழா… சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய முயற்சி
