பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலைக்கு சென்றார்!
பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இவரின் ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தில் லிவர்பூர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.


அங்கு ஓட்டலில் தங்கி இருந்த போது, திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மயங்கி சுயநினைவினை இழந்துள்ளார். விரைவில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு பரிசேதனை செய்த மருத்துவர்கள் பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது சுயநினைவினை இழந்த அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், சற்று ஆபத்தான நிலையிலேயே இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


