Homeசெய்திகள்சினிமாஸ்பெயின் சுற்றுலா பயணிக்கு வடஇந்தியாவில் நேர்ந்த கொடூரம்... பாடகி சின்மயி ஆவேசம்...

ஸ்பெயின் சுற்றுலா பயணிக்கு வடஇந்தியாவில் நேர்ந்த கொடூரம்… பாடகி சின்மயி ஆவேசம்…

-

வடஇந்தியாவில் சுற்றுலா சென்றிருந்த ஸ்பெயின் நாட்டு பெண்மணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பிரபல பாடகி சின்மயி, கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் ஆசியா முழுவதும் இருசக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஆசியா முழுவதும் சுற்றும் நோக்கத்தில் இந்தியாவும் அவர்கள் வந்தடைந்தனர். கடந்த வாரம் வட இந்தியாவில், ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்ற அவர்கள், டும்கா மாவட்டத்திற்கு சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த மர்ம கும்பல், கொடூரமாக தாக்கி அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதை அப்பெண் வீடியோவாக பதிவிட்டு தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவில் உள்ள பிரேசில் தூதரகம் அறிக்கை வெளியிட்டது. அவர்களை கைது செய்ய வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, மர்ம கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதே சமயம், இச்சம்பவத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சினிமா நடிகர் நடிகைகளும், இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானும், இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரபல பாடகி சின்மயிலும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், சில இந்தியர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்போது, அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட முடியும் என்றால், சில ஆண்கள் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டால் இந்தியர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

MUST READ