குடும்பங்கள் கொண்டாடும் அயலான்… மக்களின் மனதை வென்றதா?
- Advertisement -
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குளில் வெளியாகி இருக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகள் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. அதற்கு காரணம் பொங்கலை முன்னிட்டு கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி உள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்

படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்படபலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நீண்ட இடைவௌியாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், இன்று ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் அயலான் படத்தை காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குடும்பம் குடும்பமாக சென்று அயலான் படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.

அயலான் படத்தின் முதல் பாதி நகைச்சுவையுடன் செல்வதாகவும், இரண்டாம் பாதியில் கதை தொடங்கி விறுவிறுப்பாக திரைக்கதையை எடுத்துக் செல்வதாகவும் விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. மேலும், படத்தை தாங்கிப் பிடிக்கும் தூணாக இருப்பது விஎஃப் காட்சிகள். ஏலியன் படம் முழுக்க பயணித்தாலும், செயற்கை தன்மை இல்லாமல் மக்கள் ரசிக்கும் படியாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்ற திரைப்படமாக அயலான் உருவாகி உள்ளது. பாடல்கள் மற்றும் இசைகள் படத்தின் கதையோடும், காட்சிகளோடும் ஒன்றிச் செல்வதாக தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்மறை விமர்சனங்கள் அயலான் படத்திற்கு பெரிதாக இல்லை என்றாலும், லாஜிக் குறித்து இளைஞர்கள் விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், பண்டிகை காலத்தில் குடும்பமாக சென்று கொண்டாட ஏற்ற திரைப்படம் அயலான் என்றும் தெரிவித்துள்ளனர்.