Homeசெய்திகள்சினிமாதடைகளை தாண்டி ஓடிடியில் வெளியானது சிவகார்த்திகேயனின் 'அமரன்'!

தடைகளை தாண்டி ஓடிடியில் வெளியானது சிவகார்த்திகேயனின் ‘அமரன்’!

-

- Advertisement -

அமரன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.தடைகளை தாண்டி ஓடிடியில் வெளியானது சிவகார்த்திகேயனின் 'அமரன்'!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். CH சாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி , கீதா கைலாசம், ராகுல் போஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி கிட்டத்தட்ட 300 கோடி வரை வசூல் செய்துள்ளது. இருப்பினும் இந்த படத்தில் சாய் பல்லவி வரும் காட்சி ஒன்றில் மொபைல் எண் ஒன்று காண்பிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண் தன்னுடையது என்றும் இந்த படம் வெளியான நாள் முதலில் இருந்து பல்வேறு அழைப்புகள் அந்த எண்ணிற்கு வருவதனால் தன்னால் படிக்கவோ தூங்கவோ முடியவில்லை என பொறியியல் மாணவன் வாகீசன் என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். தடைகளை தாண்டி ஓடிடியில் வெளியானது சிவகார்த்திகேயனின் 'அமரன்'!அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த படத்தினை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கிடையில் இந்த படத்தில் காஷ்மீர் மக்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பின. இவ்வாறு பல தடைகளை தாண்டி இன்று (டிசம்பர் 5) அமரன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

MUST READ