நடிகர் சூரி தமிழ் சினிமாவில், வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரி என ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதற்கு முன்னதாக பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வந்தார். அதன் பின்னர் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், சசிகுமார், தனுஷ் சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் ஹீரோவாக களமிறங்கினார் சூரி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விடுதலை 2, கொட்டுக்காளி, கருடன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சூரி, சசிகுமாரை விட அதிகமான சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சூரி நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கி வரும் திரைப்படம் தான் கருடன். இந்த படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க, நடிகர் சசிகுமார் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தான் சூரி 7 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும், சசிகுமார் 2 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சூரி ஒரு ஹீரோவாக முத்திரை பதித்து விட்டார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -