பிரபாஸ் மிகவும் சோம்பேறி… இயக்குநர் ராஜமௌலியின் பதில்…
- Advertisement -
கடந்த 2015-ம் ஆண்டு ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பாகுபலி. இப்படத்தை பிரம்மாண்டத்திற்கு என்றே பெயர்போன ராஜமௌலி இயக்கி இருந்தார். அவருக்கு கிடைத்த அடைச்சொல்லுக்கு ஏற்ப பாகுபலி திரைப்படத்தையும் மாபெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இயக்கினார். இத்திரைப்படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க அவருக்கு சரிக்கு சமமான வில்லனாக ராணா டகுபதி நடித்திருந்தார். மேலும், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நாசர், அனுஷ்கா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாகுபலி இரண்டாம் பாகம் உருவானது. இத்திரைப்படம் 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வௌியானது. முதல் பாகத்தில் அதே நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தனர். இத்திரைப்படமும் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலைக் குவித்து வரலாற்று சாதனை புரிந்தது. பாகுபலி மூன்றாம் பாகத்தை இயக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் ராஜமௌலி உறுதி அளித்திருந்தார்
இந்நிலையில் நடிகர் பிரபாஸ் ஒரு சோம்பேறி என்று இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். அவரிடம் பிரபாஸின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராஜமௌலி, ஒரு பெண்ணைத் தேடி பெற்றோரிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்ய முடியாத அளவு பிரபாஸ் ஒரு சோம்பேறி என்று நய்யாண்டியாக பதில் அளித்தார்.