spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ராய்க்கு கையில் அறுவை சிகிச்சையா?....அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஐஸ்வர்யா ராய்க்கு கையில் அறுவை சிகிச்சையா?….அதிர்ச்சியில் ரசிகர்கள்!

-

- Advertisement -

நடிகை ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்தார். ஐஸ்வர்யா ராய்க்கு கையில் அறுவை சிகிச்சையா?....அதிர்ச்சியில் ரசிகர்கள்!தொடர்ந்து ஜீன்ஸ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். அதேசமயம் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை மணமுடித்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ரஜினி, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். கடந்தாண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஐஸ்வர்யா ராய்க்கு விபத்து ஏற்பட்டு கையில் கட்டு போடப்பட்டிருப்பது தெரியவந்தது. தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரத்யேக உடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் அழகு நடை போட்டார். ஐஸ்வர்யா ராய்க்கு கையில் அறுவை சிகிச்சையா?....அதிர்ச்சியில் ரசிகர்கள்!இது அனைவரின் கவனத்தையும் ஐஸ்வர்யா ராய் பக்கம் திருப்பியது. இருப்பினும் ஐஸ்வர்யா ராய்க்கு கையில் என்ன பிரச்சனை? அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவாக பல பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கு எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக கையில் கட்டு போடப்பட்டுள்ளதாகவும் அதற்காக ஐஸ்வர்யா ராய், அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

MUST READ