Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' குறித்து புதிய அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா!

‘குட் பேட் அக்லி’ குறித்து புதிய அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா!

-

- Advertisement -

அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, குட் பேட் அக்லி குறித்து புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.'குட் பேட் அக்லி' குறித்து புதிய அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா!

அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் அஜித், திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் நடிகை சிம்ரனும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. 'குட் பேட் அக்லி' குறித்து புதிய அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா!இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடிகர் அஜித், படத்தில் ‘தீனா’ பட லுக்கில் நடித்திருக்கும் நிலையில் தீனா படத்தில் இடம் பெற்ற ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ பாடல் இந்த படத்தில் ரீமேக் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அடுத்தது பல வருடங்களுக்கு பிறகு சிம்ரன், அஜித்துடன் நடித்திருப்பதும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அடுத்தது அஜித்தின் ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் செய்த சம்பவத்தை பார்க்கவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தான் சமீபத்தில் இந்த படத்தின் விநியோகிஸ்தர் ராகுல் இந்த மாத இறுதியிலிருந்து குட் பேட் அக்லி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில், குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் இன்று (பிப்ரவரி 22) மாலை 7.03 மணி அளவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். எனவே இது டீசர் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ