நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதே சமயம் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அந்தமான், ஊட்டி, கேரளா போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஆனால் நீண்ட நாட்களாக தொடங்கப்படாமல் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்க இருப்பதாக சமீபத்தில் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் சூர்யா தனது 45 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சூர்யா 45 படத்தின் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி இயக்குனர் அட்லீ, சூர்யா 45 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் சூர்யா 45 திரைப்படமானது ஓம் பிரகாஷ் இயக்கும் கர்ணா படமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளி வருகின்றன. அடுத்தது பா. ரஞ்சித், சூர்யா 45 படத்தை இயக்குவார் என்று தகவல்கள் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் பெயரும் அந்த லிஸ்டில் இருக்கிறது.
இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயக்குனர்களின் பெயர்களை குறிப்பிட்டு சூர்யா 45 படம் தொடர்பாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் சூர்யா 45 திரைப்படத்தை கண்டிப்பாக பெரிய இயக்குனர் ஒருவர் தான் இயக்குவார் என்றும் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சூர்யா 45 திரைப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -