சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பால முரளி, ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கொரோனா காலகட்டம் என்பதால் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியிடப்பட்டது. ஜிவி பிரகாஷ் குமாரின் தாறுமாறான இசை படத்திற்கு பெரிய பக்க பலமாக அமைந்தது. திரைப்படம் மிகுந்த வெற்றியை பெற்ற போதிலும் திரையரங்குகளில் படத்தை காண முடியவில்லை என்ற ஏக்கம் ரசிகர்களிடையே இருந்து வந்தது. மேலும் சூரரை போற்று படம் ஐந்து தேசிய விருதுகளையும் பல சர்வதேச விருதுகளையும் வென்றது.
இந்நிலையில் சூர்யாவின் 43வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். இப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார். புறநானூறு என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வரும் டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இப்படத்தினை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிற நடிகர் நடிகருக்கான தேர்வு சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. புறநானூறு படமும் சூரரைப் போற்று படத்தைப் போலவே விறுவிறுப்பான, புரட்சிகரமான கதையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.