spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகணவரை பிரிந்துவிட்டேன்... கதறி அழுத ராஜ்கிரண் மகள்...

கணவரை பிரிந்துவிட்டேன்… கதறி அழுத ராஜ்கிரண் மகள்…

-

- Advertisement -
கோலிவுட்டின் முக்கிய முகங்களில் ராஜ்கிரணும் ஒருவர். பழைய திரைப்படங்களில் அவர் கறி சாப்பிடும் அழகிற்கே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அன்று ஹீரோவா நடித்துக் கொண்டிருந்த ராஜ்கிரண், தற்போது தந்தை வேடங்களிலும், தாத்தாவாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ராஜ்கிரணுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பெயர் ஜீனத் பிரியா. இவர், நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரில் நடித்த முனீஸ் ராஜாவை காதலித்து, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

மகளின் ரகசிய திருமணத்தை எதிர்த்த நடிகர் ராஜ்கிரண், இனி ஜீனத் தனது சொந்த மகள் இல்லை என்றும், அவர்கள் இருவரும் தன் பெயரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை விட்டிருந்தார். இதையடுத்து கணவர் ராஜ்கிரண் தொடர்பாக அவதூறு பரப்புவதாக, ராஜ்கிரணின் மனைவி பத்மஜோதி, தனது மகள் ஜீனத் மீது புகார் அளித்தார். இந்த பிரச்சனை பல மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது தனது கணவர் முனீஸை பிரிந்துவிட்டதாக ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியா அதிர்ச்சி தகவலை பகிர்ந்தார். நாங்கள் பிரிந்துவிட்டோம், எங்கள் திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை, அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு பிறகு தன் தந்தையை மிகவும் வருத்தப்பட வைத்துவிட்டேன். அப்படியிருந்தும் என் பெற்றோர் என்னை காப்பாற்றினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ