spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

-

- Advertisement -
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கூடிய கால அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படத்திற்கான மானியம் மற்றும் சின்னத்திரை விருதகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோலாகலமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து நடத்தி வரும் வழக்கம் உள்ளது. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் ஏற்கனவே கடந்த 8-ம் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இதில் 2019-முதல் 2022-ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள், 2018 முதல் 2022 வரை சிறிய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட தரமான திரைப்படங்களுக்கு அரசு மானியம், 2015 முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் சின்னத்திரை தொடர்களில் சிறந்த நடிகர் நடிகைகள் மற்றும் சிறந்த தொடர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

இதையடுத்து, விண்ணப்பம் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என திரையுலகினர் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 31-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சென்னை கலைவாணர் அரங்கில், முதல் தளத்தில் உள்ள திரைப்படத்துறையினர் நல வாரியத்தில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ