ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது 170 ஆவது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். ஏ படம் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.
மேலும் இந்த படத்தில் அமிதாபச்சன், நானி, பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக சமீபகாலமாக செய்திகள் பரவி வருகிறது. இருந்த போதிலும் இது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தற்போது இதன் புதிய அப்டேட்டாக தலைவர் 170 படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.அதாவது நடிகர் நானி நடிக்கும் கதாபாத்திரத்தில் சர்வானந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நானி மற்றொரு படத்தில் கமிட்டாகி விட்ட காரணத்தால் இந்த வாய்ப்பு ஷர்வானந்துக்கு கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது அதனால் விரைவில் இந்த படம் சம்பந்தமான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.