Homeசெய்திகள்சினிமாசென்னையில் இருந்து கேரளாவிற்கு சென்ற ரஜினி.....'தலைவர் 170' ஷூட்டிங்கை தொடங்கிய படக்குழு!

சென்னையில் இருந்து கேரளாவிற்கு சென்ற ரஜினி…..’தலைவர் 170′ ஷூட்டிங்கை தொடங்கிய படக்குழு!

-

- Advertisement -

ரஜினி தனது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் தயாராக உள்ளது.

இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. அதைத் தொடர்ந்து நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து கேரளாவிற்கு தலைவர் 170 படப்பிடிப்பிற்காக கிளம்பினார்.

இந்நிலையில் இன்று தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக லைக்கா நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தலைவர் 170 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் கேரளா திருவனந்தபுரம் பகுதியில் உள்ள யானை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ