spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'அமரன்' ஓடிடி ரிலீஸை ஒத்திவைக்க வேண்டி திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

‘அமரன்’ ஓடிடி ரிலீஸை ஒத்திவைக்க வேண்டி திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. 'அமரன்' ஓடிடி ரிலீஸை ஒத்திவைக்க வேண்டி திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்திருந்தார். இதில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக நடிக்க, சாய் பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். CH சாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதன்படி இந்த படம் உலக அளவில் சுமார் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'அமரன்' ஓடிடி ரிலீஸை ஒத்திவைக்க வேண்டி திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!இதனால் ஏற்கனவே அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. அதன்படி தற்போது திரையரங்க உரிமையாளர்களும் அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸை தள்ளிவைக்குமாறு ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம், சிவகார்த்திகேயன் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

MUST READ