இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. ஜாலியான படங்கள் கொடுத்து ரசிகர்களின் ஆதரவு பெற்று வருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதையடுத்து விஜய்யுடன் அவர் கூட்டணி அமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கட் பிரபுவின் அடுத்த திட்டம் குறித்த ஒரு போஸ்டர் வெளியானது. அது என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு புதிதாக தயாரிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் எழுதி, இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு நண்பன் ஒருவன் வந்த பிறகு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பை வீடியோவுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் அடுத்தடுத்து நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Nanban oruvan vantha piragu
Your “Tomorrows” will be perfect. So happy to present #NOVP #aVPgift Written & Directed & Performed by @ActorAnanth
Produced by @Aishwarya12dec @masala_popcorn @studios_white
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா வெற்றிகள் குமியுமடா!!… pic.twitter.com/2Zm4ognaPd— venkat prabhu (@vp_offl) July 30, 2023