விக்னேஷ் சிவன் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன்பின் அஜித்தை வைத்து படம் இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டு, தற்போது அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு விக்னேஷ் சிவன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அதன்படி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் புதிய படத்தின் தலைப்பு “LIC” என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரபல மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, தங்கள் நிறுவனத்தின் பெயரை அவமதிக்கும் வகையில் இப்படத்தின் பெயர் அமைந்துள்ளது எனக் கூறி படத்தின் தலைப்பை மாற்ற நோட்டீஸ் அனுப்பியது. எனவே இப்படத்தின் டைட்டில் மாற்றப்படும் என்றும் நம்பப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கிர்த்தி செட்டி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கிடையில் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரபல ஆன்மீக சிந்தனையாளர் சத்குரு ஜக்கி வாசுதேவ் படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். விக்னேஷ் சிவன் சத்குருவின் மிகப்பெரிய பக்தர் என்பதால் அவர் கையாலேயே படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டு விரைவில் திரையரங்குகளில் படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.