Homeசெய்திகள்சினிமாஇந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி.... மீண்டும் விளக்கம்!

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி…. மீண்டும் விளக்கம்!

-

- Advertisement -

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி.... மீண்டும் விளக்கம்!இந்த தாக்குதலில் 26 அப்பாவை சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் தங்களின் கருத்தினை தெரிவித்தாலும், இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை உள்ள அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள்? என்பது போன்றும் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி.... மீண்டும் விளக்கம்!அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, “காஷ்மீரில் உயர்ந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயம் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மை போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புவார்கள். வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.
இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி.... மீண்டும் விளக்கம்!விஜய் ஆண்டனியின் இந்த பதிவை சிலர் தவறாக புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விமர்சனத்தை கொடுத்து வந்தனர். தற்போது இதற்கு விஜய் ஆண்டனி மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி அவர், என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு என்று குறிப்பிட்டு “காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். எனவே இந்திய அரசும், நாமும் நம் வலிமையான கரங்களால் நாம் இறையான்மையை பாதுகாப்போம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

MUST READ