Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்.... செருப்பை தூக்கி வீசிய மர்ம நபர்!

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்…. செருப்பை தூக்கி வீசிய மர்ம நபர்!

-

விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்.... செருப்பை தூக்கி வீசிய மர்ம நபர்!நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நிமோனியா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு உலகம் முழுவதும் இருக்கும் தமிழக மக்களை பெரிதும் பாதித்துள்ளது. தன்னலம் கருதாத பொது நல வாதியாக வாழ்ந்து மறைந்த விஜயகாந்த் மறைவிற்கு ரசிகர்கள் தொண்டர்கள் என பலரும் தங்களின் இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் பலரும் படையெடுத்து வந்து நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே சமயம் அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்களும் விஜயகாந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்.... செருப்பை தூக்கி வீசிய மர்ம நபர்!

அந்த வகையில் நேற்று விஜயகாந்த் உயிரிழந்த சமயத்தில் நடிகர் விஜய் வெளிநாட்டில் தளபதி 68 படப்பிடிப்பில் இருந்தார். கேப்டன் விஜயகாந்தின் மறைவு குறித்த தகவல் அறிந்ததும் விஜயகாந்தை காண ஓடோடி வந்தார் விஜய். அப்போது கண்கலங்கியபடி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜயின் மீது மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசி எறிந்தார். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் மேல் அந்த செருப்பு படவில்லை என்றாலும் கூட பொது இடத்தில் அதுவும் அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் இப்படி செய்தது மிகப்பெரிய தவறு என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ