spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிக்ரம் எங்கள கண்டுக்கல… அனுராக் காஷ்யப் சொன்னதுக்கு உடனே பதில் அளித்த விக்ரம்!

விக்ரம் எங்கள கண்டுக்கல… அனுராக் காஷ்யப் சொன்னதுக்கு உடனே பதில் அளித்த விக்ரம்!

-

- Advertisement -

‘கென்னடி’ படத்திற்காக விக்ரமை அணுகிய போது அவரிடமிருந்து பதில் வரவில்லை என்று அனுராக் காஷ்யப் சமீபத்திய பேட்டியில் கூறியதை அடுத்து, விக்ரம் அதற்கு பதிலளித்துள்ளார்.

அன்புள்ள அனுராக் காஷ்யப் சமூக ஊடகங்களில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்காக ஒரு வருடத்திற்கு முந்தைய உங்கள் உரையாடலை மீண்டும் பார்த்தேன்.

we-r-hiring


இந்தப் படத்திற்காக நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தீர்கள் என்றும், நான் உங்களுக்கு பதிலளிக்கவில்லை என்று நீங்கள் உணர்ந்ததாகவும் வேறொரு நடிகரிடமிருந்து நான் கேள்விப்பட்டபோது, ​​உடனடியாக உங்களை அழைத்து, உங்களிடமிருந்து எனக்கு எந்த மெயில் அல்லது செய்தியும் வரவில்லை என்று விளக்கினேன். நீங்கள் என்னை தொடர்பு கொண்ட மெயில் ஐடி செயலில் இல்லை, அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே எனது எண் மாறிவிட்டது. அந்த தொலைபேசி அழைப்பின் போது நான் சொன்னது போல்,

உங்கள் கென்னடி படத்திற்காக நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன், மேலும் அதில் என் பெயர் கூட இருக்கிறது. இனிவரும் காலங்கள் இனியதாக அமைய வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த அனுராக், “நிச்சயம் விக்ரம் சார். மக்களின் தகவலுக்காக, வேறொரு நடிகரிடம் நான் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் என்று அவர் கண்டறிந்ததும், அவர் என்னை நேரடியாக அழைத்தார், அவரிடம் வேறு வாட்ஸ்அப் எண் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். அவர் என்னை அணுகுவதற்கு சரியான தகவலைக் கொடுத்தார், மேலும் ஸ்கிரிப்டைப் படிப்பதில் ஆர்வம் காட்டினார், ஆனால் அதற்குள் நாங்கள் அனைவரும் தயாராகி ஒரு மாத ஷூட்டிங்கில் இருந்தோம். படத்திற்கு “கென்னடி” என்ற பெயரைப் பயன்படுத்தவும் அவர் கேட்டிருந்தார்.

விக்ரம் சாரும் நானும் இணைந்து படம் பண்ணாமல் கண்டிப்பாக ரிடையர் ஆகிவிட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ